மீண்டும் காதல் வலையில் அஞ்சலி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து வருபவர், அஞ்சலி. அவர் சிரமப்பட்டு நடித்த சில படங்கள் வெற்றிபெறவில்லை. எனினும், மனம் தளராமல் சில படங்களில் நடித்து வரும் அவர், தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’, மிர்ச்சி சிவாவுடன் ‘பறந்து போ’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘ஈகை’ என்ற படத்திலும் நடிக்கிறார். இதில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் குறித்து அவர் கூறுகையில், ‘சினிமாவில் என்னை ஹீரோயினாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் ராம் என்பதால், அவர் எப்போது கேட்டாலும் மறுக்காமல் கால்ஷீட் ஒதுக்கி நடிப்பேன்.

அவர் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை பார்க்கும்போது அவ்வளவு அழகாகவும், ஈர்ப்புடனும் இருக்கும். படத்தை பற்றி சுருக்கமாக சொல்வது என்றால், அழகு என்ற வார்த்தையே பொருத்தமாக இருக்கும். ‘கற்றது தமிழ்’ படம் எப்படி என் திரைப்பயணத்தில் மறக்க முடியாத முக்கியமான படமாக இருந்ததோ, அதுபோல் ‘ஏழு கடல் ஏழு மலை’ படமும் இருக்கும். ராம், நிவின் பாலி, சூரி மற்றும் படக்குழுவினர் அனைவரும் இணைந்த கடுமையான உழைப்பை வழங்கியுள்ளோம். கண்டிப்பாக அதற்கான பலன் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்றார். முன்னதாக நடிகர் ஜெய்யை காதலித்ததாக தகவல்கள் வெளியானது.

ஆனால், திடீரென்று அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. அதுபற்றி இருவருமே பேசுவது இல்லை. இந்நிலையில், புதிதாக யாருடைய காதல் வலையிலும் அஞ்சலி சிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: