இதையடுத்து சில நாட்களில் என் அம்மா 2வது திருமணம் செய்துகொண்டார். அதில் எனக்கு துளியளவும் விருப்பம் இல்லை. புதிதாக ஒருவரை எனது தந்தையாக ஏற்றுக்கொள்ள மனம் இடம் ெகாடுக்கவில்லை. என் கல்லூரி படிப்பை முடித்த பிறகுதான் என் அம்மாவை பற்றி புரிந்துகொண்டேன்.
அம்மாவின் கணவரை ஏற்றுக்கொள்ள முடிந்தது. அவர் வந்த பிறகு எங்களின் குடும்பம் நல்ல நிலைக்கு மாறியதை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். எனக்காக என் அம்மாவும், அவரது கணவரும் குழந்தையே பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். இந்த வாழ்க்கையை புரிந்துகொள்ள இவ்வளவு காலமாகிவிட்டது’ என்றார்.