அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

இலுப்பூர், மே 22: இலுப்பூர் மற்றம் அன்னவாவல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதயில் உள்ள கிராம பகுதியில் உள்ள பெட்டிகடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கபடுவதாக, அப்பகுதியினர் இலுப்பூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் திருநாட்டில் உள்ள ஒரு பெட்டிகடையில் சோதனை செய்தனர். அதில், கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, புகையிலை பொருளை பறிமுதல் செய்து, அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், அன்னவாசல் அருகே உள்ள புதூர் பகுதியில் புகையிலை பொருள்கள் விற்ற முருகானந்தம் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

The post அன்னவாசல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: