கூடலூரில் மாயமான முதியவர் ஆற்றில் சடலமாக மீட்பு

 

கூடலூர், ஜூன் 13: கூடலூரில் மாயமான 80 வயது முதியவர் முல்லையாற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள எருமைக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (80). கடந்த 8ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அதன்பின் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் ராஜன் கொடுத்த புகாரின் பேரில், கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், லோயர்கேம்ப் பெரியாற்றின் கரையில் சட்டை மற்றும் செருப்பு கிடந்துள்து. இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் நேற்று தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் முல்லை பெரியாற்றில் கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது முல்லையாற்றில் வைரவ அணை பாலத்திற்கு கீழே கிருஷ்ணமூர்த்தி சடலத்தை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

The post கூடலூரில் மாயமான முதியவர் ஆற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: