மாணவிகள் உற்சாகம்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தஞ்சாவூரில் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 17: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 12-வது இடம் பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 95.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள்பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 2.17 சதவீதம் கூடுதல் இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 12வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 415 மாணவர்களில் 13 ஆயிரத்து 500 பேரும், 14 ஆயிரத்து 860 மாணவிகளில் 14 ஆயிரத்து 478 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 93.65 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.43 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகரித்துள்ளது.அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 94.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 88 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 163 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

பிளஸ் 1 வகுப்பில் 93.32 சதவீதம் தேர்ச்சி: இதேபோல, மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 456 மாணவ, மாணவிகள் பிளஸ் 1 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 24 ஆயிரத்து 689 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களில் 89.81 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.46 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றதன் மூலம், மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 93.32 சதவீதத்தை எட்டியது. இது, கடந்த ஆண்டை விட 4.25 சதவீதம் கூடுதல். இதன் மூலம் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 27 ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 12 ஆவது இடத்துக்கு முன்னேற்றமடைந்துள்ளது.

அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 105 பள்ளிகளில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 90.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்த ஆண்டை விட 6.97 சதவீதம் கூடுதல். இதன் மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 27 ஆவது இடத்திலிருந்து, நிகழாண்டு 10 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மாவட்டத்தில் 49 பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

The post மாணவிகள் உற்சாகம்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தஞ்சாவூரில் 95.57% பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: