கெங்கவல்லி, மே 16:கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் பஸ் ஸ்டாப் அருகில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தரப்பினர் அம்பேத்கர் சிலை வைத்தனர். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர், அம்பேத்கர் சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வருவாய்த்துறை மற்றும் போலீசார், அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதி மறுத்தனர். இதனால், இருதரப்பினரிடையே மோதல் போக்கை கருதி, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் முன்பு, சேலம் மாவட்ட மக்கள் தேச கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமையில், நேற்று அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் சிலையை திறக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி கோஷங்கள் எழுப்பினர். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
The post அம்பேத்கர் சிலை திறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.