பூலாம்பட்டி காவிரியில் பெண் சடலம் மீட்பு

இடைப்பாடி, ஜூன் 6: பூலாம்பட்டி காவிரி ஆற்றில் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மிதந்தார். இதை பார்த்த மீனவர்கள் பூலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் சிவப்பு ஜாக்கெட்டும், சிவப்பு நிற சேலையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூலாம்பட்டி காவிரியில் பெண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: