இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடை திறக்கும் போதே தரிசன வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். படிப்படியாக பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது. ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வரிசை மாடவீதி வரை நீண்டிருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
The post அண்ணாமலையார் கோயிலில் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.