தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது சாமிக்கு அலங்காரம் செய்ய அழைத்து சென்றபோது

வேலூர், ஏப்.27: வேலூழில் சாமிக்கு அலங்காரம் செய்ய அழைத்து சென்றபோது, தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன்(33). இவர் சாமி சிலையை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி கார்த்திகேயனை கணியம்பாடி பகுதியை சேர்ந்த சிலர், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சாமி அலங்காரம் செய்ய வேண்டும், கணியம்பாடி அடுத்த நெல்வாய் ஏரிக்கு வாருங்கள் என அழைத்தனர். இதையடுத்து, கார்த்திகேயனும் அங்கு சென்றார். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த நெல்வாயை சேர்ந்த சந்தோஷ்(19), ஹரீஷ்(20), கணியம்பாடியை சேர்ந்த தக்காளி என்கிற தமிழரசன்(20), தனுஷ்(22) ஆகியோர், கார்த்திகேயனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து பணம் ரூ.33 ஆயிரம் மற்றும் வெள்ளி காப்பு ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பியோடி விட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ சிலம்பரசன் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் தனுஷை கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள சந்தோஷ், ஹரீஷை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது சாமிக்கு அலங்காரம் செய்ய அழைத்து சென்றபோது appeared first on Dinakaran.

Related Stories: