செல்போனுக்கு அடிமையான சிறுமி தற்கொலை கே.வி.குப்பம் அருகே பெற்றோர் கண்டித்ததால்

div style="clear:both; height:3px">

கே.வி.குப்பம், மே 15: கே.வி.குப்பம் அருகே பெற்றோர் கண்டித்ததால் செல்போனுக்கு அடிமையான சிறுமி தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த ஆலங்கனேரி பகுதியை சேர்ந்தவர் சிவா. இவரின் மகள் பூஜா (14). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பூஜா வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் சிறுமி பூஜா செல்போனுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மணிக்கணக்கில் செல்போன் உபயோகிப்பத்திலேயே மூழ்கி கிடந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியை அடிக்கடி பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதியன்று வழக்கம் போல் செல்போன் உபயோகித்தற்காக தாய் திட்டியுள்ளாராம். இதனால் மனமுடைந்த சிறுமி அன்று இரவு உணவு உண்ணாமலேயே கோபித்துக்கொண்டு உறங்க சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் காலை எழுந்து பாரத்த போது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து தொங்கியபடி கிடந்த சிறுமியை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சப் இன்ஸ்பெக்டர் சீதா தலைமையிலான போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீதா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post செல்போனுக்கு அடிமையான சிறுமி தற்கொலை கே.வி.குப்பம் அருகே பெற்றோர் கண்டித்ததால் appeared first on Dinakaran.

Related Stories: