தேனீக்கள் கொட்டி 10 பேர் படுகாயம் பள்ளிகொண்டா அருகே பரபரப்பு பொங்கல் வைக்க தீ மூட்டியபோது

பள்ளிகொண்டா, மே 15: பள்ளிகொண்டா அருகே பொங்கல் வைக்க தீ மூட்டியபோது தேனீக்கள் கொட்டி 10 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமம், வேலாங்காடு கிராமத்தில் உள்ள பொற்கொடி அம்மன் கோயிலில் நேற்று புஷ்பரத ஏரித் திருவிழா கோலாகலமாக நடந்தது. பொற்கொடி அம்மனை தரிசிக்க மாட்டு வண்டிகளிலும் ஆட்டோக்களிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் பக்தர்கள் அதிகளவில் சென்றனர். இந்நிலையில் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி அருகே கனிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள கன்னி கோயில் அருகே பக்தர்கள் பொங்கலிட்டு அன்னதானம் வழங்கினர். அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் அன்னதானத்தை பெறுவதற்காக வரிசையில் நின்றிருந்தனர். மேலும் பொங்கல் வைப்பதற்கு தீ மூட்டிய போது புகை சூட்டினால் மரத்தில் கட்டியிருந்த தேனீக்கள் திடீரென பரவி அங்கிருந்த ஏராளமானவர்களை கடித்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததால் அருகில் உள்ள பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தரிசனம் செய்ய வந்த பக்தர்களை தேனீக்கள் கொட்டியதால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

The post தேனீக்கள் கொட்டி 10 பேர் படுகாயம் பள்ளிகொண்டா அருகே பரபரப்பு பொங்கல் வைக்க தீ மூட்டியபோது appeared first on Dinakaran.

Related Stories: