மாடு விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் வேலூர் அடுத்த மேட்டுஇடையம்பட்டியில்

வேலூர், மே 16: வேலூர் அடுத்த மேட்டுஇடையம்பட்டியில் நேற்று காலை நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் சீறிப்பாய்ந்தன. வேலூர் பாகாயம் அடுத்த மேட்டுஇடையம்பட்டியில் மாடுவிடும் திருவிழா நேற்று காலை தொடங்கியது. விழாவை முன்னிட்டு காளைவிடும் திருவிழா நடக்கும் சாலையின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு திமிரி, காவனூர், ஆரணி, ஊசூர், கணியம்பாடி, அணைக்கட்டு, காட்பாடி, கழிஞ்சூர் என வேலூர் சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும், திருப்பத்தூர் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன.

இவ்வாறு வந்த காளைகளுக்கு முதல் முதலில் மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து களத்தில் ஓடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி பெற்ற காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இவ்வாறு திடலில் பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் ஆகியோர் வீடுகளின் பால்கனி, மொட்டை மாடி ஆகிய இடங்களில் நின்று ஆயிரக்கணக்கனோர் ஆரவாரம் செய்து ரசித்தனர். குறிப்பிட்ட இலக்கில் மிககுறைந்த தூரத்தில் கடந்து போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் வேலூர் ஆர்டிஓ செந்தில்குமார் தலைமையில் வேலூர் தாசில்தார் செந்தில்ராஜ் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். மாடு விடும் விழாவை முன்னிட்டு காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post மாடு விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் வேலூர் அடுத்த மேட்டுஇடையம்பட்டியில் appeared first on Dinakaran.

Related Stories: