ஒரு மணி நேரம் கனமழை

நாமக்கல், ஏப்.12: நாமக்கல் பகுதியில் நேற்று அதிகாலை சிறிது நேரம் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று மாலை இடி மின்னலுடன் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நாமக்கல் அடுத்த முதலைப்பட்டி பைபாஸ் பகுதியில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் உள்ள பயணிகள் நிழற்கூடம் நேற்று மாலை மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு ஒரு புறமாக சரிந்து விழுந்தது. அப்போது, அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.

The post ஒரு மணி நேரம் கனமழை appeared first on Dinakaran.

Related Stories: