ராசிபுரம், ஏப். 27: அத்தனூர் அம்மன் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரிழுத்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோயில், சித்திரைத் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, குதிரை வாகனம், சிம்ம வாகனம், காமதேனு வாகனம், பூத வாகனம் மற்றும் பல்லாக்கு வாகனம் என நாள்தோறும் பல்வேறு வாகனங்களின் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை தொடங்கியது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரிழுத்தனர். தொடர்ந்து எருமை கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு பகுதியில் இருந்த பக்தர்கள் திரண்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டனர்.
The post அம்மன் கோயில் தேரோட்ட விழா appeared first on Dinakaran.