சேலம், ஏப்.27: சேலம் பெரியகவுண்டாபுரம் கசாப்பு காட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் சக்திவேல்(17). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மேட்டூரில் உள்ள ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதன் பிறகு படிக்க செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 24ம்தேதி வீட்டின் அருகில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். பின்னர், நுங்கு பறிப்பதற்காக அங்குள்ள பனை மரத்தில் ஏறிவிட்டு கீழே இறங்கினார். அப்போது, எதிர்பாராத வகையில் கீழே விழுந்துவிட்டார். இதில் தலை, இடுப்பு மற்றும் கால்முறிவும் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
The post பனையிலிருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு appeared first on Dinakaran.