பரமத்திவேலூர், ஏப்.24: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே, மல்லையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (65), விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக, நாமக்கல் செல்வதற்காக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பரமத்திவேலூர் அனுச்சம்பாளையம் பிரிவு சாலை அருகே சென்ற போது, பின்னால் அதிகமாக வந்த கார், பெரியசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post கார் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.