பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோடு, ஏப்.27: திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரத்தில், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி நடந்தது. மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள், அதன் பயன்பாட்டை தவிர்த்தல் குறித்தும் பி.டி.ஓ., பாலவிநாயகம் தலைமையில், முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. பொதுமக்களுக்கு விழி்பபுணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பி.டி.ஓ.,அலுவலக வளாகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரணியில் பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தூய்மைக்காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

The post பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: