ராசிபுரம், ஏப்.26: ராசிபுரத்தில் உள்ள கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையத்தில் தினசரி பட்டுக்கூடு ஏலம் நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு உற்பத்தி விவசாயிகள், ராசிபுரத்திற்கு பட்டுக்கூடுகளை கொண்டுவந்த விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் 212 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் பட்டுக்கூடு கிலோ அதிகபட்சம் ரூ.609க்கும், குறைந்தபட்சம் ரூ.399க்கும், சராசரி ரூ.522க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக 212 கிலோ பட்டுக்கூடுகள் ரூ.1.11 லட்சத்திற்கு விற்பனையானது.
The post ரூ.1.11 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம் appeared first on Dinakaran.