நாமக்கல், ஏப்.26: நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஏப்ரல் 26ம் தேதி, உலக கால்நடைகள் தினமாக கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செயல்பட்டு வரும், 105 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கால்நடை மருத்துவமனைகளிலும், இன்று (26ம் தேதி) காலை 8 மணி முதல் 12 மணி வரை, இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். எனவே அனைத்து செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களும், தங்கள் செல்லப்பிராணிகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வெறிநோய் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
The post இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.