சேலம், ஏப்.11: சேலம் ரயில்வே கோட்டத்தில் முதுநிலை வணிக மேலாளராக பணியாற்றி வந்த பூபதிராஜா, பதவி உயர்வோடு சென்னை தெற்கு ரயில்வே தலைமையிடத்திற்கு துணை முதன்மை இயக்க மேலாளராக (சரக்கு) இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பொறுப்பிற்கு பாலக்காடு கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் வாசுதேவன் நியமிக்கப்பட்டார். புதிய முதுநிலை வணிக மேலாளராக நியமிக்கப்பட்ட வாசுதேவன் நேற்று, சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கூடுதல் கோட்ட மேலாளர் சிவலிங்கம் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார். பின்னர், அவரை மற்ற துறைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வணிக பிரிவு அதிகாரிகள், அலுவலர்கள் வாழ்த்தினர்.
The post புதிய முதுநிலை வணிக மேலாளர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.