மகளை பெண் கேட்டு தராததால் தாயை தாக்கிய பெயிண்டர் கைது

சேலம், ஏப்.23: சேலம் குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங்போர்டு 7வது பிளாக் பகுதியை சேர்ந்த மாது மகன் இன்பராஜ்(19). பெயிண்டரான இவர், அதே பகுதியை சேர்ந்த வள்ளி என்பவரது மகளை திருமணம் ெசய்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு வள்ளி மறுத்த நிலையில், தகராறு செய்ததுடன், அவரை கல்லால் தாக்கினார். இதில் காயம் அடைந்த வள்ளி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. பெண் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான இன்பராஜை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இன்பராஜை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மகளை பெண் கேட்டு தராததால் தாயை தாக்கிய பெயிண்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: