₹65 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அயோத்தியாப்பட்டணம், ஏப்.22: அயோத்தியாப்பட்டணம் அருகே, மின்னாம்பள்ளியில் நேற்று வாரச்சந்தை கூடியது. அதிகாலை முதலே பல்வேறு இடங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாடுகளை, விற்பனைக்கு கொண்டு வந்தனர். மாடுகளை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். கன்றுகள் ரூ.4,200 முதல் ரூ.7,800 வரையிலும், மாடுகள் ரகத்தை பொறுத்து ரூ.7,500 முதல் ரூ.60,000 வரையிலும் விற்பனையானது. மழை காரணமாக மாடுகள் வரத்து சரிந்து, ரூ.65 லட்சம் வரை வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹65 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: