மது விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

ஓமலூர், ஏப்.12: ஓமலூர் வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக, சந்து கடைகள் மூலம் மது விற்பனை செய்வதாக ஓமலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரிக்கரையில் மது விற்பனை செய்த சேனைகவுண்டனூர் சிவா (57) கைது செய்து அவரிடம் இருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல செம்மாண்டபட்டி பாலிகாடு காலனியை சேர்ந்த விஜயா (55), வீட்டில் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல நாரணம்பாளையம் கிராமம் ஜெயராக்கினி நகரில் வசிக்கும் சின்னப்பர் (45), வீட்டில் 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலைய பிணையில் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

The post மது விற்ற பெண் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: