சந்து கடையில் மது விற்ற பெண் கைது

கெங்கவல்லி, ஏப். 18: வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் அரசு மதுபானங்கள் பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ் குமாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து வீரகனூர் எஸ்ஐ தங்கவேல் தலைமையில் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வேப்பம்பூண்டி பகுதியில் ஏரிக்கரையில் சோதனை செய்தபோது, ஜெயபால் என்பவரின் மனைவி பூங்கொடி என்பவர், டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சந்து கடையில் மது விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Related Stories: