பெரம்பலூர்,ஏப்.10: பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் தாலுக்கா, சத்திரமனை கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு அலுவலர் சுந்தரராமன் தலைமையில் நடைபெறுகிறது. வேப்பந்தட்டை தாலுக்கா, பூலாம்பாடி கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் வாசுதேவன் தலைமையிலும், குன்னம் தாலுக்கா, ஓதியம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெய தலைமையிலும், ஆலத்தூர் தாலுக்கா, அடைக்கம்பட்டி கிராமத்தில், பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலும் நாளை மறுநாள் (12ம்தேதி) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், பொது மக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள்
சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து,பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post உணவு பொருள் வழங்கல் சம்மந்தமாக பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.