பெரம்பலூர்,ஏப்.25: பெரம்பலூர் ஸ்ரீ பிரம்ம புரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகராட்சியில் துறையூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் நேற்று சித்திரை மாத வியாழக்கிழமையை முன்னிட்டு காலை 11 மணி அளவில் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன்படி ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்னர் மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் பெரம்பலூர், துறை மங்கலம், அரணாரை, விளாமுத்தூர், எளம்பலூர், நெடுவாசல், சிறுவாச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கவுரி சங்க சிவாச்சாரியார் செய்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.
The post பெரம்பலூர் ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.