கோபியில் சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

 

கோபி, ஏப்.10: இலவச சட்ட உதவி தொடர்பாக பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் ஒரு பகுதியாக கோபி ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் சார்பில் நீதிமன்றம் முன்பு சமரச மைய விழிப்புணர்வு பேரணி தொடங்கியது.

பேரணியை 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தயாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜீவபாண்டியன், ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் தமிழரசு, ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் உத்தர வாசுகி, வழக்கறிஞர் சங்க தலைவர் காளத்திநாதன் செயலாளர் தனகோட்டி ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கோபியில் சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: