வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

 

சத்தியமங்கலம், ஏப்.10: வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் ஜமேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் முன்னிலை வகித்தார். ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன கோஷமிடப்பட்டது.

இதில் வழக்கறிஞர் ப.பா.மோகன், இ.கம்யூ மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  ஏஐடியுசி தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார், இ.கம்யூ ஒன்றிய செயலாளர்கள் நடராஜ், சுரேந்தர், மகேந்திரன், வேலுமணி, கடம்பூர் ராமசாமி மற்றும் 150க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: