ஈரோடு, ஏப். 12: ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த காசிபாளையம் பவானி ஆற்றங்கரை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், கடத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்ஐ ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் கோபி காசிபாளையத்தை ரேஷன் கடை பகுதியை சேர்ந்த அன்பழகன் (54), அதேபகுதி கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜேந்திரன் (54), சேத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்நத் பெருமாள் (55), சந்தை கடை புதூரை சேர்ந்த செல்வம் (50), மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த வடிவேல் (48), கொடிவேரியை சேர்ந்த அருள் (50) ஆகிய 6 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.4,100 ரொக்கம் மற்றும் சீட்டு கட்டினை பறிமுதல் செய்தனர்.
The post பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.