பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் தொடங்கியது

பெரம்பலூர்,ஏப்.9: பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று ஆண்டு தேர்வு தொடங்கியது. மாணர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். பெரம்பலூர் மாவட்டத்தில் 6,7,8,9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் நேற்று முதல் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் நடைபெற்றது. முதல் நாளான நேற்று 8ம் தேதி 6,7 வகுப்புகளுக்கு காலையில் தமிழ் பாடத்திற்கும், 8,9 வகுப்புகளுக்கு மதியம் தமிழ் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெற்றன.

இன்று 9ம் தேதி 6,7 வகுப்புகளுக்கு காலையில் ஆங்கிலப் பாடத்திற்கும், 8,9 வகுப்புகளுக்கு மதியம் ஆங்கிலப் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. 16ஆம்தேதி புதன்கிழமை 6,7 வகுப்புகளுக்கு காலையில் கணிதப் பாடத்திற்கும், 8,9 வகுப்புகளுக்கு மதியம் கணிதப் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. 17ஆம்தேதி வியாழக் கிழமை 6,7 வகுப்புகளுக்கு காலையில் விருப்பப் பாடத்திற்கும், 8,9 வகுப்புகளுக்கு மதியம் விருப்பப் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. 21ஆம்தேதி திங்கட்கிழமை 6,7 வகுப்புகளுக்கு காலையில் அறிவியல் பாடத்திற்கும், 8,9 வகுப்புகளுக்கு மதியம் அறிவியல் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகிறது.

22ஆம்தேதி செவ்வாய்க் கிழமை 6,7 வகுப்புகளுக்கு காலையில் உடற் கல்வியியல் பாடத்திற்கும், 8,9 வகுப்புகளுக்கு மதியம் உடற்கல்வியியல் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. 23ஆம் தேதி புதன்கிழமை 6,7 வகுப்புகளுக்கு காலையில் சமூக அறிவியல் பாடத்திற்கும், 24ஆம்தேதி வியாழக் கிழமை 8,9 வகுப்புகளுக்கு மதியம் சமூகஅறிவியல் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகிறது. 25ம் தேதி முதல் 6முதல் 9 வகுப்பு மாணவ மாணவியருக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: