கிருஷ்ணகிரியில் சிறுதானியம் நுகர்வு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, மார்ச் 21: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் ஆகியவை இணைந்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில், சிறுதானியங்கள் குறித்து பதாதைகளை ஏந்தி, பெங்களூரு சாலை வழியாக அண்ணாசிலை வரை சென்று மீண்டும் பள்ளிக்கு திரும்பினர். இதில், 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணகிரியில் சிறுதானியம் நுகர்வு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: