கிருஷ்ணகிரி, மார்ச் 22: கிருஷ்ணகிரி அருகே நாச்சிக்குப்பம் பண்ணைப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்(45). இவர், ₹4.5 லட்சம் லோனில் பழைய லாரி ஒன்ரை வாங்கி ஓட்டி வந்தார். ஆனால், பணத்தை சரிவர கட்ட முடியவில்லை. இதனால், மனவேதனையில் இருந்து வந்த அவர், கடந்த 15ம் தேதி விஷத்தை குடித்து மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post லாரி டிரைவர் விஷம் குடித்து சாவு appeared first on Dinakaran.