ஓசூர் அருகே மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ போராடி அணைப்பு

ஓசூர், மார்ச் 19: ஓசூர் அருகே மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதனை போராடி அணைத்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகளை கொண்டு சென்று, தின்னூர் பகுதியில் உள்ள கிடங்கில் கொட்டி வருகின்றனர். அங்கு குப்பை கழிவுகள் நுண்ணுயிர் செயலாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சுமார் ஒரு டன் துணிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை, குப்பை கிடங்கில் இருந்த குப்பைகள் மற்றும் பழைய துணிகள் தீப்பற்றி எரிந்தது. அதனைக்கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இதனால், தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிந்து, குப்பை கிடங்கிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post ஓசூர் அருகே மாநகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ போராடி அணைப்பு appeared first on Dinakaran.

Related Stories: