திருமணமான இளம்பெண் மாயம்

ஊத்தங்கரை, மார்ச் 20: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை சூரக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி சுபலட்சுமி(26). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வசித்து வந்தனர். கடந்த 6மாதத்திற்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் சுபலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டு, அவருடன் சென்று விட்டார். இதையடுத்து, ஊர்மக்கள் சமரசம் பேசி, அவரை மீண்டும் அழைத்து வந்தனர். அதன் பின்னர், சுபலட்சுமி மிட்டப்பள்ளியில் உள்ள தனது தந்தை சாமிநாதன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 10ம் தேதி ஈரோட்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சுபலட்சுமி வீட்டில் இருந்து சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதுகுறித்து சாமிநாதன் அளித்த புகாரின் பேரில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: