தேன்கனிக்கோட்டை, மார்ச் 22: அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி மகள் நயன்தாரா(19). இவர், நர்சிங் படித்து முடித்து விட்டு பர்கூரில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வையாபுரி கொடுத்த புகாரின்பேரில், அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிந்து, நயன்தாராவை தேடி வருகின்றனர்.
The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.