கிருஷ்ணகிரி, மார்ச் 21: தர்மபுரி அடுத்த மதிகோண்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(54), லாரி லோடுமேன். இவர் கடந்த 18ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகேயுள்ள பெரியபனமுட்லு பகுதியில் உள்ள தனியார் ஓடு தொழிற்சாலையில் இருந்து, லாரியில் ஓடுகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்து தவறி அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
The post லாரியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.