இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டனை தொழிற்சாலையில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடலை திருவள்ளூர் தாலுகா போலீசார் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மணிகண்டனின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போதிய பராமரிப்பு இல்லாத இரும்பு லிப்ட்டை வைத்திருந்த தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டனின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் வாழ்வாதாரத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், இதற்கு தொழிற்சாலை நிர்வாகம் பதில் கூற வேண்டும் என்று கூறினர். அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதம் நீடித்தது. இதில் 10க்கும் மேற்பட்ட ஆண் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை வெளியேற்ற முடியாமல் திணறினர். உடனடியாக முற்றுகை போராட்டம் செய்த பெண்கள் கம்பெனிக்கு உள்ளே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே கம்பெனிக்கு உள்ளே இருந்தவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி இரும்பு கேட்டை பூட்டினர். போலீசார் தொடர்ந்து இரவு முழுவதும் இறந்து போன மணிகண்டன் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிர்வாகத்துடன் பேசி உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவள்ளூர் அருகே சோகம்; தனியார் தொழிற்சாலையில் லிப்ட் அறுந்து வாலிபர் பலி: உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.