இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டம் அந்த இடத்தில் நடைபெறுவதாக கூறினார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கோபிநாத், கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவ விழா காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டது. பேரணி நடத்த எந்த கட்சிக்கும் அனுமதியில்லை என்று தெரவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் நாளை (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.
The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்திபேரணி நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி மனு appeared first on Dinakaran.