சாலையை கடந்தபோது பரிதாபம்: மெரினாவில் கார் மோதி ஐஸ் வியாபாரி உயிரிழப்பு

சென்னை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (50). இவர், சென்னை அயனாவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மெரினா கடற்கரையில் ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரையில் ஐஸ் வியாபாரம் முடித்துவிட்டு, காமராஜர் சாலையில் உள்ள அரசு தடயவியல் ஆய்வு கூடம் அருகே சாலையை கடந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து, ஐஸ் வியாபாரி ரமேஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஐஸ் வியாபாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் சிவானந்தம் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையை கடந்தபோது பரிதாபம்: மெரினாவில் கார் மோதி ஐஸ் வியாபாரி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: