புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இறால் பண்ணை உரிமையாளர் முகமது சுல்தானுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கைக்கு கடத்த போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக முகமது சுல்தான் என்பவர் கைது செய்யப்பட்டார். மீமிசல் இறால் பண்ணையில் போதைப்பொருளை நுண்ணறிவு பிரிவு போலீசார் மார்ச் 11ல் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் பதுக்கல் வழக்கில் தொடர்புடைய சாகித் நசீம் என்பவர் இலங்கைக்கு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல்..!! appeared first on Dinakaran.

Related Stories: