அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (6ம் தேதி) வெளியாகிறது. அதன்பிறகு, உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கான, 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு வருகிற 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டு சட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அம்பேத்கர் சட்டப்பல்கலை அறிவிப்பு 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு வரும் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: