காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரண பின்னணி, குற்றவாளிகளை விரைந்து கண்டறிய வேண்டும்: தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏப்ரல் 30ம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் துறையிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கைஎடுக்காமல் இருந்ததன் விளைவாகவே, ஜெயக்குமாரின் மரணம் நடந்தேறியுள்ளது. இதன் பின்னணியையும், குற்றவாளிகளையும் விரைந்து கண்டறிய அரசை வலியுறுத்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

The post காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மரண பின்னணி, குற்றவாளிகளை விரைந்து கண்டறிய வேண்டும்: தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: