மனைவிக்கு எதிராக ராமதாஸ் பிரசாரத்தால் பாதிப்பா? அன்புமணி பரபரப்பு பேட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று பாஜ வேட்பாளர் ஏழுமலையை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: இந்த தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே தான் போட்டி. நாடாளுமன்றத் தேர்தலில்தான் முதல்வர் ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் போட்டி நடந்தது. இது சட்டமன்றத் தேர்தல். எனவே, இந்த தேர்தலுக்கும் பாஜவுக்கும் சம்பந்தமில்லை.
ஜனநாயகன் திரைப்படம் ஆளுங்கட்சிக்கு எதிராகவு, எங்கள் கூட்டணிக்கு எதிராகவும் இந்த படம் இருக்கும் என்று நான்கு மாதத்திற்கு முன்பு சொன்னார்கள்.

இந்த படம் லீக் ஆனது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் சுலபமாக தெரிந்து கொள்ளலாம். ஆனால், சிபிஐ விசாரணை எப்போது வரும்? எப்போது விசாரிப்பார்கள்? அதற்குள் தேர்தல் முடிந்து விடும். எனவே, இதனை உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன். தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தர்மபுரியில் ராமதாஸ், மருமகளை எதிர்த்து (அன்புமணி மனைவி சவுமியா) பிரசாரம் செய்ய இருக்கிறாரே அதனால் பாதிப்பு ஏற்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு போகப் போகத்தான் தெரியும் என அன்புமணி பதிலளித்தார்.

Related Stories: