(10.7.2025 முதல் 16.7.2025 வரை)
சாதகங்கள்: சுகஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி. 6ல் புதன். 5ல் குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். இவையெல்லாம் சாதகமான அம்சங்கள். தன குடும்பாதிபதி 5ல் வலுப்பெற்று ராசியைப் பார்ப்பதால், பொருளாதாரப் பிரச்னைகள் வராது. கவனத்துடன் செய்யும் வேலைகள் சிக்கலைத்தராது. எந்தப் பிரச்னைகளையும் சமாளித்து விடும் ஆற்றல் கிடைக்கும். அஷ்டமாதிபதி புதன் 6ல் இருப்பதால், எதிர்பாராத நன்மைகளும் நல்ல செய்திகளும் கிடைக்கும். உங்களுக்கு இடைஞ்சல் செய்ய நினைத்தவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வி அடைவார்கள். அதற்கு உங்கள் புத்திசாலித்தனமான அணுகுமுறை பயன் தரும்.
கவனம் தேவை: ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். கையில் இருக்கும் பணம் பத்திரம். யாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம். கொடுக்கல் வாங்கல்களில் அதிக கவனம் தேவை. பெரும்பாலும் கைமாத்து, திருப்பித் தருகிறேன் என்று சொன்ன பணம் திரும்ப வருவதற்கு இப்போதைய சூழ்நிலையில் வாய்ப்பு குறைவு. குடும்பத்தில் பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பொருட்கள் களவு போகும் வாய்ப்புண்டு என்பதால், பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். தாயாரையும் பெருமாளையும் மனப்பூர்வமாக வணங்குங்கள்.மனக்குழப்பங்கள் மாறி மகிழ்ச்சி பெருகும்.