(29.1.2026 முதல் 4.2.2026 வரை)
சாதகங்கள்: மூன்றாம் இடத்தில் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பது சிறந்த அமைப்பு. சூரியனும் மூன்றில் அவரோடு இணைந்திருக்கிறார். யோக பலன்கள் அதிகரிக்கும். சுப பலன்கள் நீடிக்கும். வெற்றியும் தன்னம்பிக்கையும் உண்டு. பொருளாதாரம் மேம்படும். எல்லா விஷயங்களிலும் சௌக்கியம் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் வெற்றி பெறும். தன குடும்ப ராசி குருவின் பார்வையில் விழுவதால், தன விருத்தி உண்டு. குடும்பவிருத்தி உண்டு. இரண்டாவது வருமானத்திற்கு வழி பிறக்கும். சில விஷயங்களுக்கு துணிந்து முடிவெடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்.
கவனம் தேவை: குருவின் ஸ்தான பலம் அஷ்டமமாக இருப்பதால், திடீர் தடைகளும் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் மனக்கஷ்டம் ஏற்படும். ஆரோக்கியக் குறைவால் திடீர் செலவுகள் ஏற்படலாம். புதிய பொறுப்புக்களால் அலைச்சல் உண்டு. ஏமாற்றம் அதிகரிக்கும். நாலில், ராகு அமர்ந்திருப்பதால் இனம் புரியாத கவலை உண்டு தாய் வழி சொந்தங்களால் சில மனஸ்தாபங்கள் உண்டு.
சந்திராஷ்டமம்: 29.1.2026 மாலை 6.32 முதல் 31.1.2026 இரவு 8.01 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.
