(24.4.2025 முதல் 30.4.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் பலம் பெறுவதால் நன்மைகள் ஏற்படாவிட்டாலும் தீமைகள் குறையும். அந்த விதத்தில் சுக்கிரன் ஆறாம் இடத்தில் பலம் பெற்றிருக்கிறார். ராசிநாதன் ராசியைக் கைவிடமாட்டார் என்கின்ற அடிப்படையில், இந்த அமைப்பு நல்ல அமைப்பு. வார மத்தியில் புதன் சூரியனோடு இணைந்து ராசியைப் பார்ப்பதால் நன்மைகள் பெருகும். கூர்மையுடன் காரியங்களைச் செய்து வெற்றி பெற வாய்ப்பு அமையும். குரு 12-ஆம் ராசியை பார்ப்பதால் விரயங்கள் கட்டுப்படுத்தப்படும். அதோடு உங்கள் தன குடும்ப ராசியையும் பார்ப்பதால் பொருளாதாரச் சிரமங்கள் குறைந்து தன்னிறைவு ஏற்படும். சனி செவ்வாய் பார்வையால் தொழில் மாற்றம் ஏற்படலாம். கல்வி, வேலை சம்பந்தமாக அயல்நாடு செல்லும் வாய்ப்புண்டு.
கவனம்தேவை: சனி செவ்வாய் ராகு பார்வை சுபம் செய்யாது. வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை. ஏழில் சூரியன் உச்சமடைந்து இருப்பதால் அலைச்சல் ஏற்படும், அதனால் ஏற்படும் உடல்நலக் குறைவு மனதில் அழுத்தத்தை ஏற்படுத்தும். கண்களைக் கவனித்துக் கொள்வது நல்லது. எட்டாம் இடத்து குரு தேவையில்லாத செலவுகளை வைத்துக் கொண்டே இருப்பார். சுபச் செலவுகளாக இருந்தாலும் கவனித்துச் செய்ய வேண்டும்.
சந்திராஷ்டமம்: 29.4.2025 காலை 2.54 முதல் 1.5.2025 பிற்பகல் 3.15 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்.