×

மகரம்

(24.4.2025 முதல் 30.4.2025 வரை)

சாதகங்கள்: இதுவரை ராசிக்கு மூன்றில் இருந்த ராகு தன குடும்பஸ்தானத்திற்கு வருகின்றார். மகர ராசிக்கு ஆறுதல் என்ன என்று சொன்னால், இயற்கைச் சுபரான குருவின் பார்வை ராசிக்குக் கிடைப்பதும், கிட்டத்தட்ட ஏழரைச் சனி பாகை கணக்கில் உபஜயஸ்தானத்தை நோக்கி நகர்வதும்தான். இது நல்ல மாற்றங்களைத் தரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். சுப காரியத்தை முன் நின்று நடத்துவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் அகன்று அமைதி நிலவும். இதனால் செயல்திறன் கூடும். குழப்பமான சிந்தனையிலிருந்து நல்ல முடிவுக்கு வருவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.

கவனம் தேவை: ராகு குடும்பஸ்தானத்தில் வந்து அமர்வதாலும், சப்தம ஸ்தானத்தில் பகைப் பெற்று கேது அமர்வதாலும் தேவையற்ற வம்பு வழக்குகள் வந்து சேரும். அதுவும் செவ்வாயின் பார்வை உங்கள் குடும்ப ராசியில் விழுவதால், அவசரப்பட்டுப் பேசி அவஸ்தைப் பட வேண்டாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சில நேரங்களில் என்ன முயற்சி செய்தும், இது நடக்கவில்லையே என்ற விரக்தி தோன்றும். மனதை தளரவிட வேண்டாம்.

பரிகாரம்: வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஈஸ்வரன் சந்நதிக்குச் சென்று விளக்கு போட்டு வாருங்கள்.

Tags :
× RELATED மீனம்