(8.5.2025 முதல் 14.5.2025 வரை)
சாதகங்கள்: குடும்ப ஸ்தானத்தில் இருந்த ராகு ராசியில் வந்து சனியோடு அமர்ந்திருக்கிறார். இரண்டில் சுக்கிரன் இருப்பதால் பொருளாதார ரீதியான ஏற்றத்தில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆடை ஆபரணச்சேர்க்கை மற்றும் வாகன யோகம் உண்டு. பெண்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கும் மனநிறைவு ஏற்படும். மூன்றில் சூரியன் இருப்பதால் அரசாங்க ஆதாயம் கிடைக்கும். அவரோடு புதனும் சேர்ந்து இருப்பதால் பத்திரிகை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
கவனம்தேவை: ஜன்ம ராசியில் இரண்டு கிரகங்கள் அதிலும் வக்ர கிரகமான ராகு சனியோடு சேர்ந்திருப்பது முன் வைத்த காலை பின் வைக்கச் செய்யும். எந்தக் காரியத்திலும் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். மனதில் தீர்மானம் இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு காரியங்கள் தாமதமாகும். செய்யலாமா வேண்டாமா என்ற கவலைகளும் சோர்வும் முயற்சிகளில் தடைகளைத் தரும். ஆரோக்கியக் குறைவு, தலைவலி, உடல் வலி முதலிய பிரச்னைகள் சேர்ந்து கொள்ளும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். முடிந்துவிடும் என்ற நினைத்த காரியங்கள் தடைபடும் அல்லது தாமதமாகும்.
சந்திராஷ்டமம்: 8.5.2025 காலை 12.58 முதல் 10.5.2025 பிற்பகல் 1.42 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: நவக்கிரக சந்நதியில் விளக்கு போடவும். வயதானவர்களுக்கு உதவி செய்யவும். பகவான் நரசிம்மரை மாலையில் பிரதோஷ காலத்தில் வழிபடுங்கள்.