வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தவிப்பு!!

சென்னை: வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வது ஒவ்வொரு தகுதியுள்ள இந்திய வரி செலுத்துபவரின் கடமையாகும். ஆண்டுதோறும் தவறாமல் தாக்கல் செய்வதன் மூலம், சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், கடன்கள், விசா பெறுதல் மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு நிதி சேவைகளுக்கான அணுகலையும் எளிதாக்குகிறது. ஒரு ITR என்பது அடிப்படையில் உங்கள் வருமானம், வரி விலக்குகள் மற்றும் இந்திய வருமான வரித் துறைக்கு செலுத்தப்படும் வரிகளின் அறிவிப்பாகும். நீங்கள் சம்பளம் வாங்கும் ஊழியராக இருந்தாலும் சரி, வணிகம் அல்லது தொழில் செய்பவராக இருந்தாலும் சரி, அல்லது ஃப்ரீலான்ஸராக பணி புரிந்தாலும் சரி, சரியான நேரத்தில் ITR தாக்கல் செய்வது மிக முக்கியம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்டதால் உரிய நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், இவ்வாண்டு மே 21ம் தேதி ஆன நிலையிலும் இன்னும் போர்டல் திறக்கப்படாததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தவித்து வருகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக ஆகியும் வருமான வரி கணக்கு போர்டல் திறக்கப்படாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், தாமதமாக தாக்கல் செய்ததற்காக வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: