இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதியே போர்டல் திறக்கப்பட்டதால் உரிய நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடிந்தது. ஆனால், இவ்வாண்டு மே 21ம் தேதி ஆன நிலையிலும் இன்னும் போர்டல் திறக்கப்படாததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தவித்து வருகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாக ஆகியும் வருமான வரி கணக்கு போர்டல் திறக்கப்படாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால், தாமதமாக தாக்கல் செய்ததற்காக வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாததால் வெளிநாடு செல்வோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தவிப்பு!! appeared first on Dinakaran.