கடற்கரையில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல்

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை மணலில் வெடிபொருட்கள் புதைத்து வைத்திருப்பதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கடற்கரை மணலில் புதைத்து வைத்திருந்த 10 டெட்டனேட்டர்கள், 10 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் மீனவர்கள் வெடி வைத்து மீன் பிடிப்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் வெடிபொருட்களை பதுக்கியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடற்கரையில் பதுக்கிய வெடிபொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: